என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூரில் அ.ம.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
Byமாலை மலர்22 Feb 2021 1:04 PM GMT (Updated: 22 Feb 2021 1:04 PM GMT)
திருப்பத்தூரில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த கூலிப்படையினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அ.ம.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் வானவராயன் (வயது 28). இவர் திருப்பத்தூரில் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமபேட்டையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சங்கர் (62) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் வானவராயனை பெங்களூருவைச் சேர்ந்த கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் புருஷோத்தமன் மகன் தாமஸ் (28), கோவிந்தசாமி மகன் சூர்யா (28), திருப்பத்தூர் கவுதம பேட்டைபகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அம்ரிஷ் (21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X