என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே போலீஸ்காரர் தற்கொலை- குடும்ப தகராறில் விபரீத முடிவு
Byமாலை மலர்22 Feb 2021 12:52 PM GMT (Updated: 22 Feb 2021 12:52 PM GMT)
கரூர் அருகே குடும்ப தகராறு காரணமாக போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தோகைமலை:
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 32). இவர், கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். புவனேஸ்வரி இறந்து விட்டதால், நிஷா என்ற பெண்ணை மகாலிங்கம் 2-வது திருமணம் செய்து கொண்டார். நிஷாவுக்கு, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் வழக்கம்போல பணிக்கு சென்ற மகாலிங்கம், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனையில் வெளியே சென்ற அவர் அன்று இரவு காவல்காரன்பட்டியில் தனியார் திருமண மண்டபம் எதிரே உள்ள வேப்பமரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 32). இவர், கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். புவனேஸ்வரி இறந்து விட்டதால், நிஷா என்ற பெண்ணை மகாலிங்கம் 2-வது திருமணம் செய்து கொண்டார். நிஷாவுக்கு, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் வழக்கம்போல பணிக்கு சென்ற மகாலிங்கம், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனையில் வெளியே சென்ற அவர் அன்று இரவு காவல்காரன்பட்டியில் தனியார் திருமண மண்டபம் எதிரே உள்ள வேப்பமரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X