என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி தற்கொலை
Byமாலை மலர்22 Feb 2021 12:01 PM GMT (Updated: 22 Feb 2021 12:01 PM GMT)
திருச்செந்தூர் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே தளவாய்புரம் மத்திமான்விளையை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 55). மாற்றுத்திறனாளியான இவர் அதேபகுதியில் சைக்கிள் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் வேலை இல்லாததால் கடன் வாங்கி உள்ளார். கடனை அடைக்க முடியாததால் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 18-ந் தேதி அவருடைய மனைவி சுசீலா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மகேந்திரன் தனது மனைவியிடம் குருணை மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே தளவாய்புரம் மத்திமான்விளையை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 55). மாற்றுத்திறனாளியான இவர் அதேபகுதியில் சைக்கிள் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் வேலை இல்லாததால் கடன் வாங்கி உள்ளார். கடனை அடைக்க முடியாததால் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 18-ந் தேதி அவருடைய மனைவி சுசீலா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மகேந்திரன் தனது மனைவியிடம் குருணை மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X