என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் 3 இடங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. சென்னையில் சைதாப்பேட்டை, வள்ளூவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சித்தரித்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சைதாப்பேட்டையில் ஒரு தொண்டர் கருப்பு வேட்டி- சட்டை அணிந்து சிலிண்டரை தலையில் சுமந்த படி கண்டன முழக்கம் எழுப்பினார்.
கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாட்டு வண்டியில் டூவீலர்களை ஏற்றி வந்தனர். சிலிண்டர் ஒன்றுக்கு மாலை அணிவித்து சங்கும் ஊதினார்கள்.
வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி வந்தார்கள்.
சைதைப்பேட்டை சென்னைத்தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், சைதை சின்ன மலை அருகில் உள்ள வேளச்சேரி சாலையில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., வாகை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., புகழேந்தி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பூங் கோதை அருணா, மாநில நிர்வாகிகள் பாலவாக்கம் க.சோமு, வேளச்சேரி மணிமாறன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, அடையாறு சபீல், பி.டி.அரசகுமார், அப்பாவு, க.தனசேகரன், மு.மகேஷ்குமார், எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், கே.கண்ணன், துரை கபிலன், காரம்பாக்கம் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, டி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம் கவி, ரங்கநாதன், ஆர்.டி.சேகர், நிர்வாகிகள் சங்கரி நாராயணன், கிரிராஜன், பிரசன்னா, தேவஜவகர், சிம்லா முத்துச்சோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா நன்றி கூறினார்.
சென்னை மேற்கு, தென் மேற்கு மாவட்டங்கள் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, மயிலை வேலு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
தயாநிதிமாறன் எம்.பி., மோகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், மதன்மோகன், கருணாநிதி, ஏழுமலை, ராஜா அன்பழகன், சேப்பாக்கம் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, எம்.எல்.ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, இதயவர்மன், வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட பொருளாளர் சேகர், படப்பை மனோகரன், வைத்தியலிங்கம், காமராஜர், செல்வகுமார் புகழேந்தி, ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவொற்றியூர் பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா, மாநில மீனவரணி செயலாளர் பத்மநாபன், பகுதி செயலாளர்கள் கே.பி.சங்கர், தி.மு.க. தனியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்