என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலையில் மணல் கடத்தியவர் கைது: 2 பேர் தப்பி ஓட்டம் - 3 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்22 Feb 2021 10:07 AM GMT (Updated: 22 Feb 2021 10:07 AM GMT)
குளித்தலையில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள நடுவதியம் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி அதனை சாக்கு பைகளில் நிரப்பி 2 மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 3 பேர், அதனை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். சரக்கு ஆட்டோ உரிமையாளர் குளித்தலை அருகே உள்ள கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
3 வாகனங்கள் பறிமுதல்
பின்னர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள், சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X