search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அய்யலூர் அருகே பெண் தற்கொலை

    அய்யலூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யலூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவரது மனைவி பெரியக்காள் (வயது 32). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பெரியக்காள் சம்பவத்தன்று கண்வலி கிழங்கை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெரியக்காள் நேற்று இறந்தார். இந்த தற்கொலை குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×