search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா மினி கிளினிக்
    X
    அம்மா மினி கிளினிக்

    மொடையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் - அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

    விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் மொடையூர் கிராமத்தில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் மொடையூர் கிராமத்தில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வல்லம் வட்டார கல்விக்குழு தலைவர் ஆனந்தி அண்ணாதுரை, வல்லம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றியதோடு, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

    இதில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், மனோகர், மாவட்ட இளைஞரணி தலைவர் சுகுமார், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் சகாதேவன், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமுருகன், ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கீதா செல்வம், குமார், சரசு ரவிச்சந்திரன், கவிதா தனசேகர்,, நடராசன், பாசறை ஒன்றிய செயலாளர்கள் பூபதி, தமிழ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், குறிஞ்சிவளவன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றிய மகளிரணி சத்தியவாணி ஆறுமுகம், விவசாய அணி ஒன்றிய செயலாளர் நடராசன், பேரவை இணை செயலாளர்கள் விநாயகம், மணிமாறன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, கோபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா குமார், அ.தி.மு.க. பாசறை வெங்கட்ராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், கிளை செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள், ஜெய், நாராயணன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×