search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநாட்டிற்காக தமிழக சட்டசபை வடிவில் அமைக்கப்பட்டுள்ள மேடை.
    X
    மாநாட்டிற்காக தமிழக சட்டசபை வடிவில் அமைக்கப்பட்டுள்ள மேடை.

    பா.ஜனதா இளைஞர் அணி மாநாடு- மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இன்று சேலம் வருகை

    பா.ஜனதா இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார்.
    சேலம்:

    தமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டுக்கு இளைஞர் அணி மாநில தலைவர் பி.செல்வம் தலைமை தாங்குகிறார்.

    இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணிதேசிய தலைவர் தேஜஸ்விசூர்யா வினோஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்


    இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார். அவருக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வருகிறார். மாலை 5 மணி அளவில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காமலாபுரம் சென்று அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

    இளைஞர் அணி மாநாட்டுக்காக தமிழக சட்ட சபை கட்டிடம் வடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பா.ஜனதா தொண்டர்கள் சேலத்துக்கு வந்துள்ளனர்.
    Next Story
    ×