என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Byமாலை மலர்20 Feb 2021 1:19 PM GMT (Updated: 20 Feb 2021 1:19 PM GMT)
மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
மணப்பாறை அருகே உள்ள பொய்கைத்திருநகரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 50). ஜவுளி வியாபாரம் செய்து வந்த இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் சாந்தி தனது வீட்டை பூட்டி விட்டு மணப்பாறையில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்கி இருந்தார். நேற்று தனது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த 2 பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் திருட்டு போயிருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X