search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேரையூர் அருகே சூதாடிய 6 பேர் சிக்கினர்

    பேரையூர் அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    டி.கல்லுப்பட்டி போலீசார் ரோந்து சென்றபோது காரைக்கேணி கண்மாய் கரையில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த சின்னமுனியசாமி (வயது 26), துரைப்பாண்டி (37), கல்லுப்பட்டியை சேர்ந்த முத்தரசன் (65), வில்லூரை சேர்ந்த சமையன் (35), பால்பாண்டி (29), பாலமுருகன் (29) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15,200ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×