என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மெட்ரோ ரெயில் 2-வது திட்டம்: கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் இடையே 10 கி.மீ. சுரங்கப்பாதை அமைகிறது
சென்னை:
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்- சிப்காட், பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் ஆகிய வழித்தடங்களில் நிறைவேற்றப்பட உள்ளது.
இதில் முதலாவதாக பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
3 வழித்தடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 17 டெண்டர்கள் விட திட்டமிடப்பட்டுள்ளது. 118.9 கி.மீ. தொலைவிற்கு இத்திட்டம் செயல்படுத்தும் போது சென்னை மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கலங்கரை விளக்கம்- கோடம்பாக்கம் இடையே 10 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. 5.15 கி.மீ. தூரத்தில் இரட்டை சுரங்கப்பாதை அமைகிறது. இதில் 4 ரெயில் நிலையங்கள் அமைகின்றன. மேலும் 4.8 கி.மீ. தூரத்திற்கு இரட்டை சுரங்கப்பாதைகளும் 5 ரெயில் நிலையங்களும் மொத்தம் 9 ரெயில்நிலையங்கள் உருவாகின்றன.
2020-க்குள் இத்திட்டப் பணிகளை முடித்து சேவையை தொடங்கும் வகையில் தற்போது 2 டெண்டர் விடப்படுகிறது. கட்டுமான பணிகள் தாமதமின்றி வேகமாக நடைபெறும் வகையில் டெண்டர் பிரித்து ஒதுக்கப்படுகிறது.
சுரங்கப்பாதையாக இத்திட்டம் நிறைவேற்றப்படுவதால் தி.நகர், கோடம்பாக்கம், மைலாப்பூர் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியும்.
கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த பகுதிகள் ஐ.டி. நிறுவனங்கள் அதிகமுள்ள இந்த வழித்தடம் சென்னையை இணைக்கும் வகையில் அமைகிறது.
பூந்தமல்லி வரை நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தின் மூலம் மெரினா, மைலாப்பூர், கோடம்பாக்கம், நந்தனம், தி.நகர், வடபழனி, சாலிகிராமம் ஆகிய நகரப் பகுதிகளுடன் புறநகர் பகுதி இணைய வாய்ப்பு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்