என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா முக்கிய பிரமுகர்களை 24-ந்தேதி சந்திக்கிறார்
Byமாலை மலர்20 Feb 2021 7:58 AM GMT (Updated: 20 Feb 2021 11:01 AM GMT)
ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ந்தேதி விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சசிகலா சந்திக்க உள்ளார்.
சென்னை:
பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலையாகி கடந்த 8-ந்தேதி சென்னை திரும்பினார்.
அவருக்கு வழிநெடுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அன்றைய தினம் 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்தடைந்த சசிகலா தி.நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்திருந்ததால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும் டாக்டர்களின் ஆலோசனை படி தொடர்ந்து ஓய்வில் உள்ளார்.
சென்னையில் அவர் எப்போது கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவரது உருவப்படத்திற்கு சசிகலா வீட்டில் இருந்தபடியே மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு அன்றைய தினம் விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
சென்னையில் கோவிலுக்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளார். டாக்டர்கள் எப்போது வெளியில் செல்லலாம் என்று சொல்கிறார்களோ அப்போது சசிகலா கோவிலுக்கு செல்வார். கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார், பத்திரிகை நிருபர்களையும் சந்திப்பார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலையாகி கடந்த 8-ந்தேதி சென்னை திரும்பினார்.
அவருக்கு வழிநெடுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அன்றைய தினம் 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்தடைந்த சசிகலா தி.நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்திருந்ததால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும் டாக்டர்களின் ஆலோசனை படி தொடர்ந்து ஓய்வில் உள்ளார்.
சென்னையில் அவர் எப்போது கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவரது உருவப்படத்திற்கு சசிகலா வீட்டில் இருந்தபடியே மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு அன்றைய தினம் விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
சென்னையில் கோவிலுக்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளார். டாக்டர்கள் எப்போது வெளியில் செல்லலாம் என்று சொல்கிறார்களோ அப்போது சசிகலா கோவிலுக்கு செல்வார். கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார், பத்திரிகை நிருபர்களையும் சந்திப்பார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X