search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் தற்போது கோவை மற்றும் திருப்பூரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 214-ஆக உயர்ந்துள்ளது. 

    மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலன் இன்றி பலியானவர்களின் எண்ணிக்கை 223-ஆக உள்ளது. நேற்று மட்டும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    Next Story
    ×