search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    கோவில்பட்டி பகுதியில் நாளை மின்தடை

    கோவில்பட்டி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவில்பட்டி, எப்போதும் வென்றான், கோவில்பட்டி சிட்கோ ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அந்தந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் கோவில்பட்டி நகர், புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, இளையரசனேந்தல், அப்பனேரி, அய்யனேரி, எப்போதும் வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், முத்துநகர், ஜோதிநகர், புதுரோடு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×