என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டியில் பெண் சிசு கொலை- பாட்டி கைது
Byமாலை மலர்19 Feb 2021 1:56 PM GMT (Updated: 19 Feb 2021 1:56 PM GMT)
உசிலம்பட்டியில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு கொலை செய்யப்பட்டது தொடர்பாக பாட்டி நாகம்மாளை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கே.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி சின்னச்சாமி. இவரது மனைவி சிவபிரியங்கா இவர்களுக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதுள்ள 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவ பிரியங்காவுக்கு கடந்த வாரம் பழனிபாப்பம்பட்டி அரசு மருத்துவமனையில் 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.
கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், பேச்சு, மூச்சின்றி கிடப்பதாகவும் கூறி சின்னச்சாமி, சிவபிரியங்கா ஆகியோர் குழந்தையை உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் குழந்தையின் முகத்தில் நகக்கீறல் காயங்கள் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து உசிலம்பட்டி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனே மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசுவை தலையணையால் அமுக்கி மூச்சுத் திணறச்செய்து பாட்டி நாகம்மாள் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகம்மாளை கைது செய்தனர்.
மேலும் பெண் சிசு கொலை தொடர்பாக பெற்றோர் சின்னச்சாமி-சிவபிரியங்கா தம்பதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கே.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி சின்னச்சாமி. இவரது மனைவி சிவபிரியங்கா இவர்களுக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதுள்ள 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவ பிரியங்காவுக்கு கடந்த வாரம் பழனிபாப்பம்பட்டி அரசு மருத்துவமனையில் 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.
கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், பேச்சு, மூச்சின்றி கிடப்பதாகவும் கூறி சின்னச்சாமி, சிவபிரியங்கா ஆகியோர் குழந்தையை உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் குழந்தையின் முகத்தில் நகக்கீறல் காயங்கள் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து உசிலம்பட்டி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனே மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசுவை தலையணையால் அமுக்கி மூச்சுத் திணறச்செய்து பாட்டி நாகம்மாள் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகம்மாளை கைது செய்தனர்.
மேலும் பெண் சிசு கொலை தொடர்பாக பெற்றோர் சின்னச்சாமி-சிவபிரியங்கா தம்பதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X