என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்18 Feb 2021 6:50 PM GMT (Updated: 18 Feb 2021 6:50 PM GMT)
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று காலை கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தின் மேல்மாடிக்கு பணியாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தூய்மை பணியாளர் வேல்முருகன், தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களாக அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும், இதனால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று வேல்முருகனின் மனைவி கிருஷ்ணபூச்சி வேதனையுடன் தெரிவித்தார்.
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று காலை கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தின் மேல்மாடிக்கு பணியாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தூய்மை பணியாளர் வேல்முருகன், தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களாக அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும், இதனால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று வேல்முருகனின் மனைவி கிருஷ்ணபூச்சி வேதனையுடன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X