search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி தாலுகா அலுவலகம் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    தூத்துக்குடி தாலுகா அலுவலகம் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

    வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் - கலெக்டர், தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    தூத்துக்குடி:

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனிஊதியம் வழங்கப்பட வேண்டும். மாவட்டங்களில் அதிக அளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுறு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்களில் பணியாற்றி வந்த அரசு அலுவலர்கள், ஊழியர்கள் 400 -க்கும் அதிகமானவர்கள் பங்கேற்று உள்ளனர். இதனால் கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது. பல தாலுகா அலுவலகங்கள் மூடப்பட்டன. இதனால் வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.
    Next Story
    ×