என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
Byமாலை மலர்18 Feb 2021 2:32 PM GMT (Updated: 18 Feb 2021 2:32 PM GMT)
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி நேற்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் உண்ணா நோன்பு இருத்தல், அசைவ உணவு தவிர்த்தல், ஜெபம் செய்தல் உள்ளிட்டவைகளை கிறிஸ்தவ மக்கள் மேற்கொள்வார்கள். இந்த தவக்காலம் நேற்று முதல் தொடங்கியது. தொடக்கநாள் சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி சின்னக்கோவிலில் நேற்று காலை பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
சாம்பல் புதனை முன்னிட்டு கடந்த ஆண்டு குருத்தோலை பண்டிகைக்கு பிறகு மக்கள் வாங்கி சென்ற குருத்தோலைகள் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டு, அந்த ஓலைகள் எரிக்கப்பட்டன. அதன் சாம்பலை கொண்டு பங்கு மக்கள் நெற்றியில் பிஷப் ஸ்டீபன், சிலுவை வரைந்து ஆசி கூறினார். நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி பங்கு தந்தை ஆன்றனி புருனோ தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 40 நாட்கள் தவக்காலம் முடிவில் புனிதவெள்ளியும், ஈஸ்டர் பண்டிகையும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X