என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடுவூர், நீடாமங்கலம், குடவாசல் பகுதியில் அம்மா மினி கிளினிக் -கலெக்டர் சாந்தா திறந்து வைத்தார்
Byமாலை மலர்18 Feb 2021 11:16 AM GMT (Updated: 18 Feb 2021 11:16 AM GMT)
வடுவூர், நீடாமங்கலம், குடவாசல் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை கலெக்டர் சாந்தா திறந்து வைத்தார்.
வடுவூர்:
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள கருவாக்குறிச்சியில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட கலெக்டர் சாந்தா திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதா, மன்னார்குடி சப்-கலெக்டர் அழகர்சாமி, முன்னாள் பால் வழங்கும் கூட்டுறவு வங்கித்தலைவர் கோ.அரிகிருஷ்ணன், மாவட்ட அறங்காவல் நியமனக்குழு தலைவர் செந்தில்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் எம்.ராஜேந்திரன், தவமணி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நீடாமங்கலம் ஒன்றியம் களாச்சேரி ஊராட்சி மேலபூவனூர் கிராமத்தில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட கலெக்டர் சாந்தா திறந்து வைத்தார். இதில் தாசில்தார் மணிமன்னன், ஒன்றியக்குழு உறுப்பினர்ஆதிஜனகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குடவாசல் ஒன்றியம் மணவாளநல்லூர் ஊராட்சியை சேர்ந்த எரவாஞ்சேரி மற்றும் மருதுவாஞ்சேரி ஆகிய இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் திறப்புவிழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், ஓகை தொடக்ககூட்டுறவு வங்கி தலைவர் சாமிநாதன், வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் பரக்கத் நிஷா வரவேற்றார்.
இதில் குடவாசல் தாசில்தார் ராஜன் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சுப்பிரமணியன், ஊராட்சி தலைவர்கள் தேதியூர் வசந்தா பன்னீர்செல்வம், விஷ்ணுபுரம் எழிலரசி மோகன், மருதுவாஞ்சேரி செல்வராணி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரமாசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X