என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழி மறித்து பணம் பறிப்பு- 2 பேர் கைது
Byமாலை மலர்18 Feb 2021 11:04 AM GMT (Updated: 18 Feb 2021 11:04 AM GMT)
கூத்தாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழிமறித்து பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை தேர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அப்துல்ரஜாக் (வயது76). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றார். பின்னர் மரக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கோரையாறு பாலம் அருகே வந்து கொண்டிருந்த அப்துல்ரஜாக்கை 2 பேர் வழி மறித்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் அப்துல்ரஜாக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூத்தாநல்லூர் அக்கரைப்புதுத்தெருவைச்சேர்ந்த கார்த்திகேயன் (30), லெட்சுமாங்குடி தோட்டச்சேரியை சேர்ந்த வினோத் (27) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேரும் அப்துல்ரஜாக்கை வழி மறித்து பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கார்த்திகேயன், வினோத் ஆகிய 2 பேரையும் கூத்தாநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X