என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள்- கலெக்டர்களுடன் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை
Byமாலை மலர்18 Feb 2021 2:13 AM GMT (Updated: 18 Feb 2021 2:13 AM GMT)
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, அதற்கு ஈடாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த இருக்கிறோம்.
கூடுதலாக அமைக்கப்பட வேண்டிய வாக்குச்சாவடி மையங்களை கண்டறியும் பணி நடைபெற உள்ளது. மேலும், தேர்தல் அலுவலர்களை நியமிக்கும் பணி உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் பற்றி ஆலோசிக்க வேண்டும்.
எனவே 18-ந் தேதியன்று (இன்று) மாலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறோம்.
கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தமிழகம் வந்திருந்த தேர்தல் ஆணையக் குழு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. அதை முறைப்படி செயல்படுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை கண்காணிக்க ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் குறைந்தது 10 அல்லது 12 அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, அதற்கு ஈடாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த இருக்கிறோம்.
கூடுதலாக அமைக்கப்பட வேண்டிய வாக்குச்சாவடி மையங்களை கண்டறியும் பணி நடைபெற உள்ளது. மேலும், தேர்தல் அலுவலர்களை நியமிக்கும் பணி உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் பற்றி ஆலோசிக்க வேண்டும்.
எனவே 18-ந் தேதியன்று (இன்று) மாலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறோம்.
கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தமிழகம் வந்திருந்த தேர்தல் ஆணையக் குழு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. அதை முறைப்படி செயல்படுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை கண்காணிக்க ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் குறைந்தது 10 அல்லது 12 அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X