என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண ஆசைகாட்டி என்ஜினீயரிங் மாணவி கர்ப்பம்- வாலிபர் கைது
Byமாலை மலர்16 Feb 2021 5:43 PM GMT (Updated: 16 Feb 2021 5:43 PM GMT)
தாடிக்கொம்பு அருகே திருமண ஆசைகாட்டி என்ஜினீயரிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவர், என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியுடன் பழகி வந்தார். நாளடைவில் அது காதலாக மாறியது. பின்னர் திருமண ஆசைவார்த்தை கூறி சூர்யா, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பிணியானார். இதையறிந்த சூர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை திருப்பூருக்கு அழைத்துச் சென்று விட்டார்.
இதற்கிடையே மாணவியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் தாடிக்கொம்பு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில் அவர் திருப்பூரில் இருப்பதும், சூர்யா அவரை பலாத்காரம் செய்ததில் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து திருப்பூருக்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். மேலும் சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X