என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜீயபுரம் அருகே சாலை விபத்து: ரெயில்வே ஊழியர் பலி
Byமாலை மலர்15 Feb 2021 12:25 PM GMT (Updated: 15 Feb 2021 12:25 PM GMT)
ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ரெயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜீயபுரம்:
ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ரெயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
ஜீயபுரம் அருகே உள்ள அம்மன் குடியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் மகேஷ்குமார் (வயது 30). இவர் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 4 மாத குழந்தை உள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருச்சியிலிருந்து அம்மன்குடிக்கு மோட்டார் சைக்கிளில் மகேஷ்குமார் வந்து கொண்டிருந்தார். கம்பரசம்பேட்டை அருகே வந்த போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த அவர் வேனுக்கு பின்னால் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தாா். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பகோணம் தாலுகா ஆண்டாலூரை சேர்ந்த பாண்டியராஜன் (33) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X