search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஜீயபுரம் அருகே சாலை விபத்து: ரெயில்வே ஊழியர் பலி

    ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ரெயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஜீயபுரம்:

    ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ரெயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

    ஜீயபுரம் அருகே உள்ள அம்மன் குடியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் மகேஷ்குமார் (வயது 30). இவர் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 4 மாத குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் திருச்சியிலிருந்து அம்மன்குடிக்கு மோட்டார் சைக்கிளில் மகேஷ்குமார் வந்து கொண்டிருந்தார். கம்பரசம்பேட்டை அருகே வந்த போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த அவர் வேனுக்கு பின்னால் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தாா். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பகோணம் தாலுகா ஆண்டாலூரை சேர்ந்த பாண்டியராஜன் (33) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×