என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
Byமாலை மலர்15 Feb 2021 10:25 AM GMT (Updated: 15 Feb 2021 10:25 AM GMT)
கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் சஞ்சிவ்குமார் (வயது 18). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தனது நண்பர்களுடன் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கைத்தறிநகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். சஞ்சீவ்குமாருக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றில் படிக்கட்டு கம்பியை பிடித்தவாறு குளித்தாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென்று கிணற்றுநீரில் மூழ்கி மூச்சுத்திணறினார். உடனே அவரை அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X