search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்து 140-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 798. மேலும், 120 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 222-ஆக உள்ளது.
    Next Story
    ×