என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது
Byமாலை மலர்14 Feb 2021 1:10 PM GMT (Updated: 14 Feb 2021 1:10 PM GMT)
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால் மற்றும் சவுக்கத்தலி ஆகியோர் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் மோட்டாம்பட்டி சுடுகாடு அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தீர்த்தமலை (வயது 42) சங்கர்பாலன்(26) ஆகியோரை கைது செய்த போலீசாா் இவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் நெடுமானூர் கிராமத்தில் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(41), பச்சையாப்பிள்ளை (50) ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 115 லிட்டர் சாராயத்தையும், வீரியூர் கிராமத்தில் சுடுகாடு அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட்(39) என்பவரை கைது செய்த போலீசார் இவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X