என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்13 Feb 2021 2:17 PM GMT (Updated: 13 Feb 2021 2:17 PM GMT)
தேனி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி பழைய டி.வி.எஸ். சாலையை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகன் ராமகிருஷ்ணன் (வயது 25). இவர் சிறுவனாக இருக்கும் போதே இவருடைய தாய் இறந்துவிட்டார். அவருடைய தந்தையும் சில ஆண்டுகளுக்கு பின்பு அவரை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் அதே பகுதியில் உள்ள தனது அத்தை சாவித்திரி வீட்டில் வசித்து வந்தார். பிளஸ்-2 படித்து முடித்த ராமகிருஷ்ணன், பெங்களூருவில் ஒரு தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் தனது சொந்த ஊருக்கு வந்தார். கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். இதனால், வேறு வேலைக்காக அவர் முயற்சித்து வந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த ராமகிருஷ்ணன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X