என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்திருப்பேரை அருகே மணல் கடத்தல்: 3 பேர் கைது
Byமாலை மலர்12 Feb 2021 3:14 PM GMT (Updated: 12 Feb 2021 3:14 PM GMT)
தென்திருப்பேரை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரி மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் ஆற்றுமணல் கடத்தப்படுவதாக குரும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஆற்று மணல் கடத்தியதாக, சேதுக்குவாய்த்தானை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (வயது 19), தெற்கு நல்லூரை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சுகுமார் (20), சேர்ந்தபூமங்கலம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாசானதுரை மகன் உதய ஆசாத் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய ஒரு லாரி, 3 இருசக்கர வாகனங்கள், அரை யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X