என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே நூற்பாலையில் தீப்பிடித்து ரூ.30 லட்சம் பஞ்சு, எந்திரங்கள் எரிந்து நாசம்
Byமாலை மலர்11 Feb 2021 11:17 PM GMT (Updated: 12 Feb 2021 9:55 AM GMT)
பல்லடம் அருகே நூற்பாலையில் தீப்பிடித்ததில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள், எந்திரங்கள் எரிந்து நாசமானது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ராசாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 48). இவர் அந்தப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக நூற்பாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் ஒரு ஷிப்ட்டுக்கு 50 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் நூற்பாலையில் 50 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது நூற்பாலைக்குள் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
தீ விபத்து குறித்து உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஞ்சு இருப்பு அறை மற்றும் பஞ்சு கலவை அறை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் அங்கிருந்த 50 தொழிலாளர்கள் காயம் எதுவுமின்றி தப்பினர். தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ராசாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 48). இவர் அந்தப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக நூற்பாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் ஒரு ஷிப்ட்டுக்கு 50 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் நூற்பாலையில் 50 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது நூற்பாலைக்குள் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
தீ விபத்து குறித்து உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஞ்சு இருப்பு அறை மற்றும் பஞ்சு கலவை அறை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் அங்கிருந்த 50 தொழிலாளர்கள் காயம் எதுவுமின்றி தப்பினர். தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X