என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதோ என்ற விரக்தியில் பிளஸ்-1 மாணவர் தற்கொலை
Byமாலை மலர்11 Feb 2021 11:08 PM GMT (Updated: 11 Feb 2021 11:08 PM GMT)
பாடங்கள் புரியாததால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாதோ என்ற விரக்தியில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்:
சென்னை கொளத்தூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பிரவீன்(வயது 16). இவர் சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது தனது தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது, கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்து வந்தார். ஆனால் அதில் பாடங்கள் புரியாமல் தவித்தார். தற்போது பள்ளிகள் திறந்தாலும், பாடங்கள் புரியாமல் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதோ என்ற விரக்தியில் தற்கொலை செய்தது தெரிந்தது.
சென்னை கொளத்தூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பிரவீன்(வயது 16). இவர் சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது தனது தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது, கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்து வந்தார். ஆனால் அதில் பாடங்கள் புரியாமல் தவித்தார். தற்போது பள்ளிகள் திறந்தாலும், பாடங்கள் புரியாமல் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதோ என்ற விரக்தியில் தற்கொலை செய்தது தெரிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X