என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி - 3 பேர் கைது
சென்னை:
சென்னையில் மத்திய அரசு வேலைகளை வாங்கி தருவதாகவும், எம்.பி.சீட் வாங்கி தருவதாகவும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது.
சென்னையை சேர்ந்த ஜான் என்பவரிடம் எம்.பி. சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடியை இந்த கும்பல் சுருட்டியுள்ளது.
கவர்னர் மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து ஈமெயில் அனுப்பவது போல மோசடி செய்து கைவரிசை காட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இருந்தும், கவர்னர் மாளிகை அலுவலகம் சார்பிலும் அளித்த புகாரின் அடிப்படையில் இது பற்றி உரிய விசாரணைக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.
இதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து மைசூரை சேர்ந்த மகாதேவ் (54), அவரது மகன் அங்கித் (29), ஓசூரை சேர்ந்த ஓம் (34) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
கடந்த ஒருவார காலமாக பெங்களூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்