என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவர்னர், பிரதமர் பெயரில் மோசடி செய்த கர்நாடக கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது
Byமாலை மலர்11 Feb 2021 1:06 AM GMT (Updated: 11 Feb 2021 1:06 AM GMT)
பிரதமர் மற்றும் கவர்னர் பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 3 மோசடி நபர்களை சி.பி.சி.ஐ.டி.போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சில மோசடி நபர்கள், எம்.பி. சீட் வாங்கித் தருவதாக கூறியும், மத்திய அரசு டெண்டர் வாங்கித் தருவதாகவும் ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு தமிழக கவர்னர் மற்றும் பிரதமர் பெயர்களை தவறாக பயன்படுத்திவருவதாகவும், அந்தக் கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மோசடி கும்பலிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ரூ.1½ கோடி பணத்தை இழந்துள்ளார். எம்.பி. சீட் கேட்டு அவர் இந்த பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக மைசூருவைச் சேர்ந்த மாதவய்யா (வயது 55) உள்பட சிலரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் விரைந்தனர். மாதவய்யா, அவரது மகன் அங்கிட் மற்றும் ஓம் ஆகிய 3 மோசடி நபர்களை சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் நேற்று மைசூருவில் கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வருகிறார்கள்.
மாதவய்யா ஏற்கனவே ஒரு மோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார். தற்போது ஜாமீனில் இருந்த அவர் மீண்டும் மோசடி லீலைகளை அரங்கேற்றி போலீசில் மாட்டி உள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சில மோசடி நபர்கள், எம்.பி. சீட் வாங்கித் தருவதாக கூறியும், மத்திய அரசு டெண்டர் வாங்கித் தருவதாகவும் ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு தமிழக கவர்னர் மற்றும் பிரதமர் பெயர்களை தவறாக பயன்படுத்திவருவதாகவும், அந்தக் கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மோசடி கும்பலிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ரூ.1½ கோடி பணத்தை இழந்துள்ளார். எம்.பி. சீட் கேட்டு அவர் இந்த பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக மைசூருவைச் சேர்ந்த மாதவய்யா (வயது 55) உள்பட சிலரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் விரைந்தனர். மாதவய்யா, அவரது மகன் அங்கிட் மற்றும் ஓம் ஆகிய 3 மோசடி நபர்களை சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் நேற்று மைசூருவில் கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வருகிறார்கள்.
மாதவய்யா ஏற்கனவே ஒரு மோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார். தற்போது ஜாமீனில் இருந்த அவர் மீண்டும் மோசடி லீலைகளை அரங்கேற்றி போலீசில் மாட்டி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X