என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிக்கூடங்களில் 6, 7, 8-ம் வகுப்புகளையும் இந்த மாதம் திறக்க ஏற்பாடு
Byமாலை மலர்10 Feb 2021 7:34 AM GMT (Updated: 10 Feb 2021 7:34 AM GMT)
அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது.
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய் தொற்றின் தாக்கம் குறைந்ததன் காரணமாக கல்லூரிகள் டிசம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கூடங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கடந்த மாதம் 19-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை கற்று வந்தனர்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி அந்த வகுப்புகளும் 8-ந் தேதி முதல் முழுமையாக திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
9 மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிக்கூடங்களில் பாடப்பிரிவுகள் ஒரு நாள் விட்டு ஒருநாள் செயல்படுத்தலாம் என்றும், காலை-மாலை என 2 ஷிப்ட் முறையில் நடத்தலாம் என்றும் கல்வித்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து அதற்கேற்ப 9, 10, 11, 12 வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்து வந்தாலும் நோய் பரவல் எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும் சுகாதாரத்துறையினர் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
பள்ளி-கல்வி துறையும் ஒவ்வொரு பள்ளிகூடங்களிலும் கொரோனா தாக்கம் உள்ளதா? இல்லையா? என்பதை தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் தினமும் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப நிலையை பரிசோதித்து அதன்பிறகு தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இந்த நடைமுறை கடைபிடிப்பது சாத்தியமாகி உள்ளதால் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளையும் திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. இந்த 3 வகுப்புகளுக்கும் 40 சதவீத பாடங்களை குறைத்து பள்ளிக்கூடங்களை இந்த மாதம் கடைசியில் திறக்கலாமா என அரசு ஆலோசித்து வருகிறது. 6, 7, 8-ம் வகுப்புகளையும் திறப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கல்வித்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய் தொற்றின் தாக்கம் குறைந்ததன் காரணமாக கல்லூரிகள் டிசம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கூடங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கடந்த மாதம் 19-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை கற்று வந்தனர்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி அந்த வகுப்புகளும் 8-ந் தேதி முதல் முழுமையாக திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
9 மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிக்கூடங்களில் பாடப்பிரிவுகள் ஒரு நாள் விட்டு ஒருநாள் செயல்படுத்தலாம் என்றும், காலை-மாலை என 2 ஷிப்ட் முறையில் நடத்தலாம் என்றும் கல்வித்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து அதற்கேற்ப 9, 10, 11, 12 வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்து வந்தாலும் நோய் பரவல் எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும் சுகாதாரத்துறையினர் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
பள்ளி-கல்வி துறையும் ஒவ்வொரு பள்ளிகூடங்களிலும் கொரோனா தாக்கம் உள்ளதா? இல்லையா? என்பதை தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் தினமும் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப நிலையை பரிசோதித்து அதன்பிறகு தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இந்த நடைமுறை கடைபிடிப்பது சாத்தியமாகி உள்ளதால் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளையும் திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. இந்த 3 வகுப்புகளுக்கும் 40 சதவீத பாடங்களை குறைத்து பள்ளிக்கூடங்களை இந்த மாதம் கடைசியில் திறக்கலாமா என அரசு ஆலோசித்து வருகிறது. 6, 7, 8-ம் வகுப்புகளையும் திறப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கல்வித்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X