search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நெல்லை அருகே கார்கள் மோதல்- போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயம்

    நெல்லை அருகே கார்கள் மோதிய விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறை பணிக்கு சென்றார். பின்னர் மதியம் அவர் அங்கிருந்து காரில் சிவகிரிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அந்த காரை போலீஸ்காரர் ஜெரால்டு சேவியர் ஓட்டிச் சென்றார்.

    நெல்லை அருகே சீதபற்பநல்லூரை அடுத்த புதூர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், போலீஸ்காரர் ஜெரால்டு சேவியர் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அதேபோன்று எதிரே வந்த காரில் இருந்த பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளரான ரஞ்சித் (45), சவுந்தர், சாலமோன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    காரின் இடிபாடுகளுக்குள் ரஞ்சித்தின் கால்கள் சிக்கி கொண்டன. உடனே ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, காரின் இடிபாடுகளை அகற்றி ரஞ்சித்தை மீட்டனர். படுகாயம் அடைந்த ரஞ்சித், சவுந்தர், சாலமோன் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    படுகாயம் அடைந்த ரஞ்சித் உள்ளிட்ட 3 பேரும் செங்கோட்டையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×