என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே தலையை துண்டித்து வாலிபர் படுகொலை
Byமாலை மலர்9 Feb 2021 2:01 AM GMT (Updated: 9 Feb 2021 2:01 AM GMT)
நெல்லை அருகே வாலிபர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன்-தம்பி போலீசில் சரண் அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே தாழையூத்து பூலித்தேவன் நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சிதம்பர செல்வம் என்ற கோழி (வயது 23), கூலி தொழிலாளி.
இவர் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய உறவினர்களான முருகன் மகன்கள் பாலாஜி (39), ராமையா (37) ஆகியோருடன் அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பாலாஜியின் குடும்பத்தினரைப் பற்றி சிதம்பர செல்வம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் சிதம்பர செல்வத்தின் கழுத்தில் சரமாரியாக வெட்டினர். மேலும் ஆத்திரம் தீராத அவர்கள், ஆட்டை அறுப்பது போன்று சிதம்பர செல்வத்தின் கழுத்தை அறுத்தனர். இதில் தலை துண்டிக்கப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் சிதம்பர செல்வத்தின் தலையை தனியாக துண்டித்து எடுத்த பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும், அந்த தலையுடனும், ரத்தம் தோய்ந்த அரிவாள்களுடனும் தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும் சிதம்பரசெல்வத்தின் தலையை அவரது உடல் இருந்த இடத்திலேயே வைத்தனர்.
பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிதம்பரசெல்வத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லை அருகே தாழையூத்து பூலித்தேவன் நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சிதம்பர செல்வம் என்ற கோழி (வயது 23), கூலி தொழிலாளி.
இவர் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய உறவினர்களான முருகன் மகன்கள் பாலாஜி (39), ராமையா (37) ஆகியோருடன் அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பாலாஜியின் குடும்பத்தினரைப் பற்றி சிதம்பர செல்வம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் சிதம்பர செல்வத்தின் கழுத்தில் சரமாரியாக வெட்டினர். மேலும் ஆத்திரம் தீராத அவர்கள், ஆட்டை அறுப்பது போன்று சிதம்பர செல்வத்தின் கழுத்தை அறுத்தனர். இதில் தலை துண்டிக்கப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் சிதம்பர செல்வத்தின் தலையை தனியாக துண்டித்து எடுத்த பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும், அந்த தலையுடனும், ரத்தம் தோய்ந்த அரிவாள்களுடனும் தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும் சிதம்பரசெல்வத்தின் தலையை அவரது உடல் இருந்த இடத்திலேயே வைத்தனர்.
பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிதம்பரசெல்வத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X