என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளையங்கோட்டையில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்8 Feb 2021 2:27 PM GMT (Updated: 8 Feb 2021 2:27 PM GMT)
பாளையங்கோட்டையில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் கிரிட்டா (வயது 25). பொறியியல் பட்டதாரி. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நடத்த பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
இந்தநிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருடன் அவருக்கு நிச்சயம் நடக்க இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் கிாிட்டா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X