search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பாளையங்கோட்டையில் இளம்பெண் தற்கொலை

    பாளையங்கோட்டையில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் கிரிட்டா (வயது 25). பொறியியல் பட்டதாரி. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நடத்த பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். 
    இந்தநிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருடன் அவருக்கு நிச்சயம் நடக்க இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் கிாிட்டா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×