search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மது, புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைது

    மது, புகையிலை பொருட்கள் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம், ஆவாரம்பாளையம் பஸ் நிறுத்தம் அவினாசி ரோடு, கோல்டு வின்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ராஜதுரை, விஜயபாஸ்கர், வேலாயுதம், மாதவன், முனியாண்டி, வெங்கடேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 68 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் ஆவாரம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நாராயண ராஜ், கதிர்வேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து 44 புகையிலை பாக்கெட்டுகள்பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×