என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்8 Feb 2021 8:44 AM GMT (Updated: 8 Feb 2021 8:44 AM GMT)
திருச்சி அருகே தங்கும் விடுதியில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:
நாகப்பட்டினம் வேதாரண்யம் மரைக்காயநல்லூரை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 42). கார் டிரைவரான இவர், கடந்த 4-ந் தேதி திருச்சி வந்து மத்திய பஸ்நிலையம் அருகே ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அதன்பிறகு அவர் வெளியே வரவில்லை. நேற்று முன்தினம் அவர் தங்கி இருந்த அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் வெங்கடேசன் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று அறையின் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு அருள்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X