search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போராட்டம்
    X
    ஜல்லிக்கட்டு போராட்டம்

    ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்- அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோரிக்கை

    ஜல்லிக்கட்டை மீட்பதற்காக போராடியவர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. பல எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாணிக்கம் பேசும்போது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காணும் வகையில் அங்கு நிரந்தமாக மாடங்கள் கட்ட வேண்டும்.

    தி.மு.க.வால் காவு கொடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டை மீட்பதற்காக ஏராளமானோர் போராடினார்கள். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×