என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்த்தாண்டத்தில் மாணவி கடத்தல்
Byமாலை மலர்1 Feb 2021 2:43 PM GMT (Updated: 1 Feb 2021 2:43 PM GMT)
மார்த்தாண்டத்தில் 15 வயது மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலையில் மாணவியும் அவரது அக்காளும் வீட்டில் இருந்தனர். அவர்களது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். இரவு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர், இளைய மகளை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி மூத்த மகளிடம் கேட்டபோது, வெளியே சென்றஅவள் பிறகு வரவில்லை என்று கூறியுள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தந்தை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், தனது மகளை யாரோ ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X