என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொத்தில் பங்கு கேட்டு வளர்ப்பு தந்தை மீது தாக்குதல்- வாலிபருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்1 Feb 2021 1:13 PM GMT (Updated: 1 Feb 2021 1:13 PM GMT)
கொரடாச்சேரி அருகே சொத்தில் பங்கு கேட்டு வளர்ப்பு தந்தையை தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி போலீஸ் சரகம் பெருமாளகரத்தையை சேர்ந்தவர் கோவி.மணி (வயது 73). இவரது உறவினர் மகன் ராஜ் (36). கோவி.மணிக்கு குழந்தை இல்லாததால் ராஜை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் ராஜ் திருமணமாகி நீடாமங்கலம் அருகே சித்தமல்லி கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜ் தனது வளர்ப்பு தந்தை கோவி.மணியிடம் சென்று எனக்கு உரிய சொத்தை பிரித்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதனை ஏற்காத கோவி.மணி பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ் தகாத வார்த்தைகளால் வளர்ப்பு தந்தையை திட்டி அருகில் கிடந்த கம்பால் தாக்கினார்.
இதில் காயமடைந்த கோவி.மணியை திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவி.மணி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X