என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து
Byமாலை மலர்1 Feb 2021 2:49 AM GMT (Updated: 1 Feb 2021 2:49 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் இடுவாய் அம்மா மினி கிளினிக் வளாகத்தில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில், பல்லடம் தொகுதியை சேர்ந்த கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
போலியோ சொட்டு மருந்து பணிக்காக பல்வேறு துறைகளைச்சார்ந்த 4, 780 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருந்தது. மேலும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும் இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கிட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிட வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மருத்துவ சுகாதாரத்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் இடுவாய் அம்மா மினி கிளினிக் வளாகத்தில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில், பல்லடம் தொகுதியை சேர்ந்த கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
போலியோ சொட்டு மருந்து பணிக்காக பல்வேறு துறைகளைச்சார்ந்த 4, 780 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருந்தது. மேலும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும் இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கிட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிட வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மருத்துவ சுகாதாரத்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X