search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேமலதா விஜயகாந்த்
    X
    பிரேமலதா விஜயகாந்த்

    சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு- பிரேமலதா விஜயகாந்த்

    கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்
    சென்னை:

    சென்னையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை. உடனடியாக அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

    * இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது.
     
    * 234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது.

    * கூட்டணி குறித்த இறுதி முடிவை தேமுதிக பொதுக்குழு, செயற்குழு எடுக்கும்.

    * ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.

    * சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது.

    * சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    * மூன்றாவது அணி குறித்து இப்போது கருத்து கூறமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×