search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    பிப்.8 முதல் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அரசு அனுமதி

    தமிழகத்தில் பிப்ரவரி 8-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    • தமிழகத்தில் பிப்ரவரி 28-ந்தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • பிப்ரவரி 8-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி.

    • இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8-ந்தேதி முதல் தொடங்க அனுமதி.

    • தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நேரக்கட்பாடுகள் இன்றி இயங்கலாம்.
     
    • வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்படலாம்.

    • நாளை முதல் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

    • ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சிக்கு அனுமதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×