search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொண்டலாம்பட்டி அருகே மது விற்ற 2 பேர் கைது

    கொண்டலாம்பட்டி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி.நாட்டாமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடப்பதாக கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த மகேந்திரன் (வயது 55), சுரேஷ் (52) ஆகியோர் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×