search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கொத்தனார் வீட்டில் நகை கொள்ளை- மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

    மண்டைக்காடு அருகே கொத்தனார் வீட்டில் 55 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்துள்ளனர்.
    மணவாளக்குறிச்சி:

    மண்டைக்காடு அருகே வசந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பேபிசுதா. இவர் கடந்த 25-ந்தேதி வீட்டை பூட்டி அருகில் உள்ள மாமியாரிடம் சாவியை கொடுத்து விட்டு பெத்தேல்புரத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    நேற்று முன்தினம் பிரசன்னாகுமாரின் தம்பி சுந்தர்ராஜ், அண்ணன் வீட்டுக்கு பிளம்பிங் வேலை பார்க்க தாயாரிடம் சாவியை வாங்கி சென்றார். அப்போது, வீட்டின் கதவு மற்றும் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கபட்டு இருந்தது. இதுபற்றி அறிந்த பேபிசுதா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 55 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பேபி சுதா கொடுத்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும், குளச்சல் உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×