search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காரில் கடத்திய 88 கிலோ கஞ்சா பறிமுதல்- டிரைவர் கைது

    மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு காரில் கடத்திய 88 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    பரமக்குடி:

    மதுரை ஒத்தக்கடை பகுதியிலிருந்து ஒரு காரில் 2 பேர் பரமக்குடி வழியாக ராமேசுவரம் நோக்கி சென்றுள்ளனர். அந்த கார் பரமக்குடி அருகில் கமுதக்குடி சாலையில் வரும் போது திடீரென பழுதாகி நின்று விட்டது. உடனே அந்த காரை அவர்கள் இருவரும் நடுரோட்டில் நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நெடுஞ்சாலைத்துறை போலீசார் ரோந்து வந்த போது சந்தேகத்தின் பேரில் கார் அருகே வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முயன்றனர். அது சமயம் போலீசாரைப் பார்த்ததும் காரில் வந்த ஒருவன் தப்பி ஓடிவிட்டான். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கார் டிரைவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.கோவில்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பெரியகருப்பன் (25) என்பது தெரிய வந்தது. பின்னர் காருக்குள் சோதனையிட்ட போது 4 மூடைகளில் 88 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×