search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் மாரடைப்பு ஏற்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரணம்

    கோயம்புத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). இவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

    முருகேசனுக்கு மனைவி, ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். இவர் குடும்பத்துடன் உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு முருகேசன் பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த முருகேசன் மதியம் 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முருகேசனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு 11 மணியளவில் முருகேசன் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×