என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தந்தையுடன் மொபட்டில் சென்றபோது விபத்து - டிப்பர் லாரி தலையில் ஏறி 4-ம் வகுப்பு மாணவி பலி
கவுண்டம்பாளையம்:
கோவை இடையர்வீதி வெங்கிட்டாபுரம் பாபா வீதியை சேர்ந்தவர் அசோகன். பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சகானா (வயது 9). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று அசோகன் தனது மகளுடன் மொபட்டில் புறப்பட்டார். அப்போது பின்னால் டிப்பர் லாரி ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக மொபட் மீது டிப்பர் லாரி மோதியது. மோதிய வேகத்தில் அசோகன் வேறு திசையில் தூக்கி வீசப்பட்டார். மாணவி சகானா டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சகானா பரிதாபமாக இறந்தார். தந்தை அசோகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த அசோக்குமார் (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்