search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    சீர்காழியில் கொலை-கொள்ளை: குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு கமல்ஹாசன் பாராட்டு

    சீர்காழியில் 2 பேரை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சீர்காழியில் 2 பேரை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான். 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால் வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கி விடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×